திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆயிரத்து 200 கண்காணிப்பு கேமராக்கள்

by Editor / 26-09-2022 11:07:39pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆயிரத்து 200 கண்காணிப்பு கேமராக்கள்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்களுக்கு திருப்திகரமாக மூலவர் தரிசனமும், வாகனச் சேவையின்போது உற்சவர் தரிசனமும் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருமலையில் 2 ஆயிரத்து 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்படும். 3-வது கட்டமாக 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இரு மலைப்பாதைகளில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.என் தேவஸ்தான தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆயிரத்து 200 கண்காணிப்பு கேமராக்கள்
 

Tags : 2 thousand 200 surveillance cameras for annual Brahmotsava festival at Tirupati Esummalayan Temple

Share via