ஆலமரத்தின் 102-வது பிறந்த நாளை : கேக்வெட்டி கொண்டாடிய மக்கள்

by Editor / 01-08-2021 04:35:29pm
ஆலமரத்தின் 102-வது பிறந்த நாளை : கேக்வெட்டி கொண்டாடிய மக்கள்

 

மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்த நிலையில், ஒரேஒரு ஆலமரம் மட்டும் நூற்றாண்டை கடந்தும் இருந்து வருகிறது. இந்நிலையில் நூற்றாண்டை கடந்த ஆலமரத்தை பாதுகாக்கக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102-வது பிறந்தநாளான இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக்வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

Tags :

Share via