அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சீர் - அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

by Staff / 28-02-2024 02:22:03pm
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சீர் - அமைச்சர்கள்  உதயநிதி, அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் பெற்றோர் கொண்டு வந்து வழங்கிய சீர்கள், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சென்னை மண்டல மாநாட்டில் இன்று அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.இது பற்றி எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கி அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரையாற்றினோம். படிப்பு சார்ந்து நம்முடைய அரசு கொண்டிருக்கும் கனவுகளை நனவாக்கும் அடித்தளத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் வலுவாக அமைக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு வாழ்த்துகளும் அன்பும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via