விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு

by Staff / 03-05-2024 04:28:22pm
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு

விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை. இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென நின்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியுள்ளது.
யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via