பட்டியலின ஐபிஎஸ் அதிகாரி குதிரை ஊர்வலம் செல்ல போலீஸ் பாதுகாப்பு

by Admin / 20-02-2022 02:51:14pm
பட்டியலின ஐபிஎஸ் அதிகாரி குதிரை ஊர்வலம் செல்ல போலீஸ் பாதுகாப்பு

ராஜஸ்தானில் பட்டியலினத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி, குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பண்டி மாவட்டத்தில் திருமணத்தன்று பட்டியலினத்தவர்கள் குதிரை ஊர்வலம் செல்ல குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின ஐ.பி.எஸ். அதிகாரி தன்வந்தா, திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரினார்.

தாம் ஐ.பி.எஸ். அதிகாரி என்றாலும், சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முழு பாதுகாப்புடன் ஐ.பி.எஸ் அதிகாரியின் குதிரை ஊர்வலம் நடைபெற்றது.


 

 

Tags :

Share via