அதிக வெப்பம்: கேரள போலீஸ் அதிகாரி மரணம்

by Staff / 29-05-2024 12:34:48pm
அதிக வெப்பம்: கேரள போலீஸ் அதிகாரி மரணம்

பதவி உயர்வுக்காக டெல்லியில் நடைபெற்ற பயிற்சியின் போது கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இறந்தவர் கோழிக்கோடு வடகராவை சேர்ந்த ஏஎஸ்ஐ பினீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை முதல் முகாமில் பயிற்சி பெற்று வந்தார். சம்பவத்தன்று வட இந்தியாவில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸை எட்டியது. இந்த நிலையில், ஏஎஸ்ஐ பினீஷ் நீரிழப்பு மற்றும் பிற தொடர்புடைய நோய்களால் அவதிப்பட்டார். பின்னர் அவர் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து,சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தீன் தயாள் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

 

Tags :

Share via