மெரினா கடற்கரையில் 10 மணிக்கு மேல் அனுமதி இல்லை

by Staff / 07-06-2024 03:32:01pm
மெரினா கடற்கரையில் 10 மணிக்கு மேல் அனுமதி இல்லை

இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் அளித்துள்ளது. முன்னதாக கோடை வெயிலால் வெப்பத்தை தணிக்க மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via