சவுக்கு சங்கர் 2 வழக்குகளில் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

by Staff / 07-06-2024 03:35:43pm
சவுக்கு சங்கர் 2 வழக்குகளில் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட 2 வழக்குகளில் சொந்த ஜாமீனில் விடுப்பதாக உத்தரவிட்டார். இதையடுத்து, மீண்டும் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories