நீட் தேர்வு விவகாரம்: எஃப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ

by Staff / 23-06-2024 04:41:59pm
நீட் தேர்வு விவகாரம்: எஃப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ

நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே யுஜிசி நெட் கேள்வித்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தது. நெட் தேர்வு வழக்கு ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கையும் சிபிஐ வழக்கு விசாரணைக்கு எடுத்திருந்தனர். இந்த நிலையில் சிபிஐ தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via