விஷச்சாராய விவகாரம் - நாளை ஆளுநரை சந்திக்கும் அதிமுக குழு

by Staff / 24-06-2024 02:02:16pm
விஷச்சாராய விவகாரம் - நாளை ஆளுநரை சந்திக்கும் அதிமுக குழு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு நாளை சந்திக்க உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு ஆளுநரை நாளை சந்திக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக பா.ஜ.க. குழுவினர் இன்று கவர்னரை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via