மாரடைப்பால் இறந்த ஓட்டுநர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்

by Staff / 26-07-2024 04:32:46pm
மாரடைப்பால் இறந்த ஓட்டுநர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற வேனை சாலையோரம் நிறுத்தி ஓட்டுநர் சேமலையப்பன் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

 

Tags :

Share via