பிரச்சாரத்தில் சபதம் செய்த பிரேமலதா

by Staff / 03-04-2024 04:50:38pm
பிரச்சாரத்தில் சபதம் செய்த பிரேமலதா

அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து, குடியாத்தத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கேப்டனை போல் எனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக பாடுபடுவேன் என நான் பிறந்த இந்த மண்ணில் இருந்து சபதம் ஏற்கிறேன் என தெரிவித்தார். மேலும் குடியாத்தத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை, அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால்தான் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via