தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டிமலர்த்தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதாகவும்,அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.என தவெக தலைவர் விஜய் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tags : தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டிமலர்த்தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்