எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோல மிட்டு, பால், தயிர், வெண்ணை, பழ வகைகளைப் படைத்து ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சி அடைவர்.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உயிர்களை காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாக பதியவைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோல மிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணை, பழ வகைகளைப் படைத்து ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சி அடைவர்.
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கொண்டு வரும் திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தினை தெரிவித்து, அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த ‘ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’ திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கிருஷ்ண ஜெயந்தி- கவர்னர் வாழ்த்து
Tags :