எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பி உள்ளஇருவருக்கும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.

by Admin / 30-05-2023 05:57:06pm
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பி உள்ளஇருவருக்கும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.

தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பி உள்ள முத்தமிழ் செல்வி- ராஜசேகரன் பச்சை ஆகியோர் இன்று தமிழ்நாடு  விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர் .எவரெஸ்ட் மலையேற்றத்தில் வலிகள், சிரமங்களை அனுபவங்களாகஇருவரும் எடுத்துக்கொண்டதாகவும்  மன உறுதியுடன் சிகரம் தொட்டு வந்துள்ள அவர்களுடைய உற்சாகம் இன்னும் பலருக்கு ஊக்கம் அளிக்கட்டும் என்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ் செல்வி- ராஜசேகர் இருவருக்கும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் வாழ்த்துக்களை வழங்கினார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பி உள்ளஇருவருக்கும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.
 

Tags :

Share via