ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது

ஆம்பூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் நகர பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 35) என்பவரது வீட்டில் விற்பனை செய்வதற்காக 100 பாக்கெட் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags :