மும்பைக்கு  தொடர் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .

by Admin / 07-07-2026 10:18:46am
 மும்பைக்கு  தொடர் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .

 மும்பைக்கு  தொடர் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . இதனால், மும்பை-புனே விரைவுச்சாலையில் பரவலான நிலச்சரிவுகளும், உள்ளூர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்ககுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மழை தொடர்பான சம்பவங்களால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 புனேவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒடிசாவில் நிலவும் கடுமையான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி  ஜகார்த்தா வந்தடைந்துள்ளார் .

மாறிவரும் வர்த்தக வழித்தடங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மற்றும் கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பஹ்ரைன் மன்னரைச் சந்தித்தார்

நன்கொடைத் திருட்டு மற்றும் 45 நாட்களில் 70 பொருட்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளையின் மூத்த அறங்காவலர்களான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோரின் உயர் பதவி விலகல்களை அந்த அறக்கட்டளை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது

இந்திய ஆயுதப் படைகள், அக்னிவீரர்கள் தங்களின் ஆரம்ப 4 ஆண்டு கால சேவையை நிறைவு செய்த பிறகு, அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதை ஊக்குவிக்கும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை  உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், பரவலான டிஜிட்டல் திருட்டுகளைக் கையாள்வதற்காக டெலிகிராம் நிறுவனத்திற்கு 15 நாட்கள் கடுமையான இணக்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது

தில்ஜித் தோசாஞ்சின் சர்ச்சைக்குரிய ' சட்லஜ்' (பஞ்சாப் 95 ) திரைப்படம், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மத்திய அரசு "பாதுகாப்புகாரணங்களைச்சுட்டிக்காட்டியதையடுத்து  வெளியான 48 மணி நேரத்திற்குள் ஜீ -5 ஓடிடி தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo