ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் : செல்லூர் ராஜு

by Editor / 29-09-2021 08:11:20pm
ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் : செல்லூர் ராஜு


முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவை போலவே,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்தார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார். 


மனு அளித்த பின்னர் செல்லூர் ராஜு கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவை போலவே,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

 

Tags :

Share via