எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் பதில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மறுநாள் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசுகிறார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்கிறார்.
Tags :