இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது

by Admin / 06-03-2022 01:35:59pm
இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடற்கரையிலிருந்து கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அடுத்து விரைந்து சென்ற போலீசார் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம்3 இருசக்கர9 செல்போன்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் விவேகானந்தா காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இரண்டு படகுகளில் 550 கிலோ ஏலக்காய் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

படகுகளுடன் சேர்ந்து 10 லட்சம் மதிப்பிலான ஏலக்காயை பறிமுதல் செய்த போலீசார் இதில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via