ஸ்ரீசீனிவாச திருக்கல்யாணம்

by Admin / 17-04-2022 11:37:38am
ஸ்ரீசீனிவாச திருக்கல்யாணம்


சென்னைத்தீவுத்திடலில் ,14 ஆண்டுகளுக்குப்பிறகு உலக மக்கள் நன்மைக்காகவும் மழை பொழிய வேண்டியும் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக ஸ்ரீதேவி..பூதேவி   ஸ்ரீனிவாசத்திருகிகல்யாணம் நடந்தது.திருப்பதி திருமலை போன்றே வடிவமைக்கப்பட்ட அலங்கார அமைப்பில் பட்டர்கள்,வேத பண்டிதர்கள் முறையான வேத அடிப்படையில் யாகம்பூஜைகள் செய்து செய்தனர்.இரவு ஒன்பது மணியளவில் ஸ்ரீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடந்தது.பின்னர் பக்தர்களுக்குஆரத்திகாண்பிக்கப்பட்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழக    ஆளுனர்ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

 

Tags :

Share via