நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்ற கணவர் கைது
சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மனைவி ராதா. இவர்களுக்கு கனிஷ்கா மகளும், கோகுல் உள்ளனர். இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ராதா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :