10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருச்செந்தூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த அருள்பாண்டி(22) என்ற வாலிபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்செந்தூர் வந்தபோது மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் மாணவியை அருள்பாண்டி அழைத்துச் சென்று கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாணவியின் பெற்றோர் அங்கு சென்றுள்ளனர். அங்கு மாணவி மட்டும் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அங்கிருந்து பெற்றோர் திருச்செந்தூர் அழைத்து வந்துள்ளனர். மாணவியை பெற்றோர் அழைத்துச் சென்றதை அறிந்த அருள்பாண்டி மாணவியை தேடி திருச்செந்தூர் வந்துள்ளார்.
திருச்செந்தூர் வந்த இவரை திருச்செந்தூர் தாலுகா போலீசார் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அருள்பாண்டி மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :