ஆட்டோ டிரைவர் தற்கொலை

by Admin / 14-03-2022 02:57:16pm
 ஆட்டோ டிரைவர் தற்கொலை


கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனியில் உள்ள ஜெயஸ்ரீ நகரில் வசித்து வந்தவர் ஆதிகேசவன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் எமிலி (34) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via