ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்

by Admin / 14-03-2022 03:06:18pm
 ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  

இந்த கூட்டத்தொடரில், காங்கிரஸ் உறுப்பினர்கள், மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் குறித்து இரண்டு அவைகளிலும் குரல் எழுப்புவார்கள் என்றார். 

நேற்றைய தினம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 5 மாநில தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என்றும், ஐந்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் பொறுப்பு எனவும் கூறினார்.

தேர்தல் தோல்விக்கு காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பாகாது என்றும் தெரிவித்தார்.'சோனியா காந்தி  ராஜினாமா' என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மீது காங்கிரசார் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பாஜகவின் சித்தாந்தத்தை உடைக்கும் வகையில், வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமாக உழைக்கும் எனவும் கூறினார்.
 

 

Tags :

Share via

More stories