அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

by Admin / 14-03-2022 03:26:42pm
அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

கேரளாவில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது  மோதிய விபத்தில் 2 போலீசார்  நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. .

விவேக் தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்காக்கநாடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதிவேகத்தால் வந்த  கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  கார் சென்டர் மீடியனில் மோதியதாக கூறப்படுகிறது.

சென்டர் மீடியனில் மோதிய வேகத்தில் கார் ஒரு புறமாக திரும்பிய நிலையில் சாலையோரம் இருந்த வாகனங்களை அடித்து தூக்கி வீசியது.

அங்கிருந்த கம்பத்தில் மோதி தாறுமாறாக சென்றகார் இன்க்கோ பார் காவல் நிலையம் அருகே சுவற்றில் மோதி நின்றது.

அப்போது இரண்டு போலீசார் பைக்கில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்கள் இருவரும்  நூலிழையில் உயிர் தப்பினார்.

காருக்குள் இருந்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

 

Tags :

Share via