ஜம்முவில் பயங்கரவாதிகள் தாக்குதல் போலீசார் உள்பட 4 பேர் பலி 

by Editor / 12-06-2021 04:36:41pm
 ஜம்முவில் பயங்கரவாதிகள் தாக்குதல் போலீசார் உள்பட 4 பேர் பலி 


 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலை தடுக்க இந்திய இராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் ஆகியோர் தினமும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான், தனது இராணுவம் மூலமாக மறைமுகமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் ஊக்குவித்து வருகிறது.
 இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 காவல் அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 2 பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலும் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via