துப்புரவு பணியாளர்களுக்கு கெஜ்ரிவால் தீபாவளி பரிசு

by Staff / 01-11-2023 04:06:40pm
துப்புரவு பணியாளர்களுக்கு கெஜ்ரிவால் தீபாவளி பரிசு

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தீபாவளி பரிசாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று புதன்கிழமை அறிவித்தார். "ஜனவரி 2023 முதல் 6,494 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களின் சேவைகளை நாங்கள் முறைப்படுத்தியுள்ளோம்" என்று கெஜ்ரிவால் கூறினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via