லாரி- பைக் மோதி விபத்து: போலீஸ் ஏட்டு பலி.

by Staff / 09-11-2023 02:49:06pm
 லாரி- பைக் மோதி விபத்து: போலீஸ் ஏட்டு பலி.

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(53). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணசாமி நேற்று இரவு பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னிமலை - ஈங்கூர் ரோட்டில் உள்ள எல்லைமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் லாரியை திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணசாமியின் குடும்பம் பங்களாபுதூரில் இருந்ததால் தினமும் அங்கிருந்து அதிக தூரத்தில் உள்ள சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்காக வந்து செல்ல வேண்டி இருந்ததால் கிருஷ்ணசாமி தனக்கு பணி மாறுதல் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை பணி மாறுதல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. விபத்தில் இறந்த கிருஷ்ணசாமியின் உடலை பார்த்து போலீசார்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.

 

Tags :

Share via