தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கு தலைமை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க ஆணை

தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கை தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு முன்னுரிமை உள்ளிட்டவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இல்லாத தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு நீதிபதி எம் எஸ் ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மதுரை கிளையில் தீர்ப்பும் ஒன்றுக்கொன்று முரண் உள்ளதால் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுவதாக நீதிபதி தெரிவித்தார்.
Tags :