ரூ. 7 கோடி செலவில் தமிழக அரசின் புதிய திட்டம்

by Staff / 16-05-2024 04:22:37pm
ரூ. 7 கோடி செலவில் தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமியை தமிழக அரசு அமைக்கிறது. 2.75 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள அகாடமியில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், ஜிம் போன்றவை இடம்பெறவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பாய்மரப்படகு போட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

Tags :

Share via