மார்ச் 3 ,2026 ,அன்று சந்திர கிரகணம். திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு..
மார்ச் 3 ,2026 ,அன்று சந்திர கிரகணம். திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு...
.சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் திருப்பதி தேவஸ்தானம் கோவில் காலை ஒன்பது மணிக்கு மூடப்பட்டு இரவு ஏழு முப்பது மணிக்கு திறக்கப்படும் என்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சுமார் கோவில் நடை 10.30 மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பரிகார சடங்குகளுக்கு பிறகு இரவு 8.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆற்ச்சிட பிரமோற்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருமாறு தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags :


















