நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

by Staff / 30-04-2022 12:44:33pm
நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்


நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வருகிற மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 84 ஆயிரத்து 214 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறுகிறது. நாடு முழுவதும் வரும் ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

 

Tags :

Share via