துக்க நிகழ்ச்சியில் பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்

by Staff / 17-05-2022 02:28:40pm
  துக்க நிகழ்ச்சியில் பலஸ்தீனியர்களுக்கும்  இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் படுகாயமடைந்தார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த லாவிட் ஷெரீப் நேற்று உயிரிழந்தார்.இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பாலஸ்தீனர்கள் சிலர் இஸ்ரேலிய படையினர் மீது கற்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் வீசினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 77 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via