431 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

by Editor / 27-09-2022 12:11:06pm
 431 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 148,811 இடங்கள் உள்ளன. இதனை, நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினருக்கு 668 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டது.
எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, மாணவர்கள் கல்லூரிகளை தகுதியின் அடிப் படையில் இணையவழியில் தேர்வு செய்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்கள் விரைவாக கல்லூரி இடங்களுக்கான விருப்பப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும்.

 

Tags : இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு

Share via