அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றின் கதவணையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் நெரிஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்திருந்து இறந்து போனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் குளிர் சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
Tags :