2 மனைவிகள் கைவிட்டதால் விரக்தி - காவலாளி தற்கொலை

by Staff / 16-05-2023 12:45:46pm
2 மனைவிகள் கைவிட்டதால் விரக்தி - காவலாளி தற்கொலை

கன்னியாகுமரி அருமனை அருகே பத்துகாணியைச் சோ்ந்தவர் சந்திரன் (55). தனியார் ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் இவருடைய மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் சந்திரன் வேறு பெண்ணை திருமணம் செய்தார். 2வது மனைவியும் பிரிந்து சென்றதால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவ தினம் சந்திரன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 

Tags :

Share via