பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைப்பு.

by Staff / 15-10-2022 04:30:39pm
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைப்பு.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தது. இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் போட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடாலக்குடி பகுதியில் ஏங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் சேகர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது இதேபோன்று மேல சூரங்குடி பகுதியில் அமைந்துள்ள பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது இதை எடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

 

Tags :

Share via