5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. பல மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இன்னும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்க்கு மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்து உள்ளனர். அதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையோ மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளார்.இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை சேதம் குறித்து அமைச்சர்கள் தலைமையில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆய்வுக்கூட்டம் நாளை 15 ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags : 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.