பிப்., 01ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 30-01-2023 08:14:29am
பிப்., 01ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து பிப்ரவரி 01ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும். இதன் காரணமாக, இன்று திங்கள்கிழமை, தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழைபெய்யக்கூடும். மேலும், வரும் பிப்., 01ஆம் தேதி, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via