திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் இரண்டாம் நாளான இன்று முத்து கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது

by Editor / 14-06-2022 10:55:51am
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் இரண்டாம் நாளான இன்று முத்து கவசம்  அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது

திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் வருடாந்திர 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது இதில் பால் தயிர் தேன் இளநீர் மஞ்சள் சந்தனம் ஆகிய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இன்று மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூ தேவிக்கு முத்து கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று மாலை முத்து கவசத்துடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து கோவில் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
 3-வது நாளான நாளை ஏழுமலையானுக்கு  மீண்டும் தங்கக் கவசம் பொருத்தப்பட உள்ளது.

 

Tags :

Share via