மனிதநேய அறக்கட்டளை சார்பில் குரூப்-1 முதன்மைத் தேர்வு நேர்முகத் தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

by Editor / 01-07-2022 08:23:17am
மனிதநேய அறக்கட்டளை சார்பில் குரூப்-1 முதன்மைத் தேர்வு நேர்முகத் தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு நேற்று முன் தினம் வெளியான நிலையில், மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் படித்த 9 பேர் இத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளு நேர்முகத் தேர்வு பயிற்சி இங்கு இலவசமாக அளிக்கப்படுவது  வழக்கம். இத்தேர்வில்  தேர்ச்சி பெற்று இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதன்மைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று முதல் சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் நேரிலோ, 044-24358373, 24330095, 8428431107 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நாளை முதல் பயிற்சி அளிக்கப்படும் என மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.


 

 

Tags : Group-1 Primary Exam Interview Training is provided free of charge on behalf of the Humanitarian Foundation.

Share via