அமெரிக்க இந்தியர் உடன் கன்னியாகுமரி பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்துகொள்ள உயர்நீதிமன்ற கிளை அனுமதி
அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திருமணம் செய்துகொள்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி சுதர்சினி தாக்கல் செய்திருந்த மனுவில் 30 நாட்களுக்குப் பிறகு திருமண விண்ணப்பத்தின் மீது சார்பதிவாளர் நடவடிக்கை எடுக்காத நிலையில். விடுமுறை இல்லாததால் ராகுல் அமெரிக்கா சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். வீடியோ கான்பரசிங் மூலம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அனுமதி அளித்துள்ளார் .மூன்று சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தவும் அதன் பிறகு திருமண பதிவு சான்றிதழ் மன வளர்ச்சி சார்பதிவாளர் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags :