மைசூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் வாக்குமூலம் அளித்த மகன்
கர்நாடக மாநிலம் மைசூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கு தொடர்பாக 16 வயது மகனே தந்தையே இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் சடலமாக கிடந்த தொழிலதிபர் சம்பத் குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை வீடு சுத்தமாக இல்லை எனக்கூறி தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்ததாக மகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக மைசூர் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
Tags :