கழிவுநீர் வாய்க்காலில் கட்டுக்கட்டாக பணம்

by Staff / 07-05-2023 05:26:48pm
கழிவுநீர் வாய்க்காலில் கட்டுக்கட்டாக பணம்

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் கட்டுக்கட்டாக பணத்துடன் பைகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக வாய்க்காலுக்குள் குதித்து பணக்கட்டுகளை போட்டி போட்டுக் கொண்டு சேகரித்தனர். அந்த பைகளில் ரூ.2000, ரூ.500, ரூ.100, ரூ.10 ஆகிய நோட்டுக்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த பணக்கட்டுக்களை வாய்க்காலில் வீசியது யார் என மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via