தே.மு.தி.க., வேட்பாளர் விலகல்

by Editor / 18-04-2021 11:42:43am
தே.மு.தி.க., வேட்பாளர் விலகல்

தே.மு.தி.க., மாவட்ட செயலர் ஜெயபாலன் தலைமை மீது புகார் தெரிவித்து, கட்சியில் இருந்து விலகினார்.திருநெல்வேலி மாவட்ட தே.மு.தி.க., செயலர் ஜெயபாலன், 60; ராதாபுரம் தொகுதி வேட்பாளர். இவர் கட்சியில் இருந்து விலகியதோடு தலைமை மீது புகார் தெரிவித்து ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.அதில், தே.மு.தி.க.,போட்டியிடும் தொகுதிகளில் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் பணிகள் குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை. விஜயகாந்திற்காக, 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.அவரை கட்சியில் இருந்து நீக்கிய தலைமை புதிய மாவட்ட செயலராக வேலாயுதம் என்பவரை நியமித்துள்ளது. மாநகர் மாவட்ட செயலராக இருந்து மாற்றப்பட்ட முகமது அலி தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

தே.மு.தி.க., வேட்பாளர் விலகல்

தே.மு.தி.க., மாவட்ட செயலர் ஜெயபாலன் தலைமை மீது புகார் தெரிவித்து, கட்சியில் இருந்து விலகினார்.திருநெல்வேலி மாவட்ட தே.மு.தி.க., செயலர் ஜெயபாலன், 60; ராதாபுரம் தொகுதி வேட்பாளர். இவர் கட்சியில் இருந்து விலகியதோடு தலைமை மீது புகார் தெரிவித்து ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.அதில், தே.மு.தி.க.,போட்டியிடும் தொகுதிகளில் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் பணிகள் குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை. விஜயகாந்திற்காக, 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.அவரை கட்சியில் இருந்து நீக்கிய தலைமை புதிய மாவட்ட செயலராக வேலாயுதம் என்பவரை நியமித்துள்ளது. மாநகர் மாவட்ட செயலராக இருந்து மாற்றப்பட்ட முகமது அலி தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

 

Tags :

Share via