மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்... சாகும் வரை சிறைத்தண்டனை

by Staff / 17-09-2022 04:22:10pm
மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்... சாகும் வரை சிறைத்தண்டனை

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் வன்கொடு செய்து வந்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், மாணவியின் தந்தையை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

 

Tags :

Share via