கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது.20 கிலோ கஞ்சா பறிமுதல்..

by Editor / 17-10-2022 08:46:54am
கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது.20 கிலோ கஞ்சா பறிமுதல்..

சென்னை ராயப்பேட்டையில் துரித உணவகத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா வாங்குவோர் போல அங்கு சென்ற போலீசார் விற்பனையில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பைக்கில் சென்று விற்பனை செய்தவர்களையும் கைது செய்தனர். மேலும் 10 கிலோ கஞ்சா, ₹40 ஆயிரம் பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுடுகாட்டுக்கு பக்கத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுப்பட்ட காலங்கரையை சேர்ந்த பரமசிவம்,விஸ்வநாதபுரத்தை சேர்ந்த அப்துல்ரசாக் ஆகிய 2 பேர்களை கைது செய்துஅவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை ஆய்வாளர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via