வனத்துறை ஊழியரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்.

by Staff / 23-11-2022 12:45:31pm
 வனத்துறை ஊழியரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்.

நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் ஜெகநாதன் என்கிற ஜெகன் ( வயது 25 ) , வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முப்பந்தல் அருகே உள்ள ஒரு இளநீர் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு வள்ளியூரை சேர்ந்தவர் அருண் ( 25 ) என்பவர் முன்விரோதம் காரணமாகஜெகளை தகாதவார்த் தைகள் பேசி அரிவாளால் வெட்ட முயன்றார். இதுகுறித்து ஜெகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via