சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி: பலர் படுகாயமடைந்தனர்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில், பில்ஹூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டைக் கடையில் சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். தீ மளமளவென பரவியதால் இரண்டு கடைகள் எரிந்து நாசமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Tags :